Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூன் 02 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டுகளைத் தொடர அனுமதித்த உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்க்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
மேன்முறையீடு செய்வதற்கான உரிமை தானாகவே வராது, ஆனால் சட்டத்தால் வெளிப்படையாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
2016 பெப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ரூ. 11 மில்லியனுக்கும் அதிகமான வாடகை செலுத்துதல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பாக கருணாநாயக்க மற்றும் தொழிலதிபர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அரசியலமைப்பில் முரண்பட்ட வரையறைகள் காரணமாக ஓர் அமைச்சரவை அமைச்சரை இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டனர். இந்த ஆட்சேபனையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் கருணாநாயக்க அந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முயன்றார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெற்ற பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் இடைக்கால உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முந்தைய மேல்முறையீட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒரு தரப்பாகக் குறிப்பிடத் தவறியது சட்டப்பூர்வமாக குறைபாடுடையது என்றும் அது குறிப்பிட்டது.
மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ரூ. 100,000 தைழக்குச் வழக்குச் செலவுகளை செலுத்தவும் உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago