2025 ஜூன் 25, புதன்கிழமை

’ராஜிதவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை’

Editorial   / 2019 ஜூன் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை,  மாலபே நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றைக் காரணமாகக் கொண்டே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமென அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .