2025 ஜூன் 25, புதன்கிழமை

ரிஷாட் தொடர்பில் விசாரணைகளின்றி வாக்களிக்க முடியாது

Editorial   / 2019 மே 22 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையல்லாது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணையொன்று அவசியமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவை வெலிகந்த பகுதியில், நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகளின்றி, நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க முடியாது நிலையில் தாம் உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றுக்கு முறையான விசாரணை இடம்பெற வேண்டும். அப்போதே, எமக்கு சரியான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .