Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 31 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் முதலில் விவாதத்துக்கு எடுக்குமாறு கோரிக்கைவிடுத்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைச்சர் ரிஷாட் பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுகளும் பாரதூரமானவை என்பதால், இவற்றை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் விசாரிப்பது அர்த்தமற்றது. எனவே, அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான விசாரணைகளை பொலிஸ், புலனாய்வுப் பிரிவினரே முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் குறித்த விசாரணைகள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றால் அமைச்சர் தனது அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் என்றார்.
எனவே, சட்டம், ஒழுங்குகளுக்கமைய அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், வருடக் கணக்கில் இழுத்தடிக்காமல், குறித்த விசாரணைகள் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும்.
எனவே, எமது இந்த யோசனையை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வருவோம். நாடாளுமன்றம் என்பது வழக்குகளை விசாரிக்கும் இடமல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.
அத்துடன் தகவல், வழிநடத்தல், அரசியல் ஆலோசனை என்பவற்றை ஒன்றிணைந்து செயற்படுத்தும் போது தான் நாட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஏற்படாது எனத் தெரிவித்துடன், பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அழைக்கப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago