2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ரிஷாட்டின் சகோதரரே சஹ்ரானுக்கு உதவியதாக சாட்சியம்

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் படகு மூலம், இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் உதவி செய்துள்ளாரென, சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (22) முன்னிலையான புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரால் இது குறித்து சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

நேற்றிலிருந்து இன்று (23) அதிகாலை 1 மணி​வரை இவர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு சஹ்ரான் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளாரென்றும் இதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் சகோதரர் உதவியுள்ளாரென்றும் சாட்சியமளித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X