2025 மே 01, வியாழக்கிழமை

ரூ.3 மில்லியன் பறிமுதல்;இராணுவத்தினர் உட்பட நால்வர் கைது

Simrith   / 2025 ஜனவரி 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்ததற்காக இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளருடன் மேலும் ஒருவர் உட்பட மொத்தமாக நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 39 - 50 வயதுக்குட்பட்ட மஹய்யாவ, கட்டுகஸ்தோட்டை, பத்தேகம மற்றும் மணிக்கின்ன ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

திருடப்பட்ட பணத்திலிருந்து 2 மில்லியன் ரூபா தொகையை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள  நகைக் கடைக்குள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனக் கூறி சந்தேகநபர்கள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் குறித்த கடை உரிமையாளரிடம் இருப்பதாக அவர்கள் போலி பிடியாணையை முன்வைத்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன், நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக தங்கம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கூறி உரிமையாளரை வற்புறுத்தி ரூ. 3 மில்லியன் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .