2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ரூ.50 இலட்சம் பெறுமதியான ஹெரோய்னுடன் நபர் கைது

Editorial   / 2019 மே 15 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளிய, சமிதபுர பிரதேசத்தில் 50 இலட்சம் ரூபாய்க்கு அதிகமதானளவில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபரொருவரை மட்டக்குளிய பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அப்பகுதியிலேயே வசிக்கும் 55 வயதுடையரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு விரைந்த போது இந்த சந்தேகநபரை ​ஒரு தொகை ஹெரோய்னுடன் கைது செய்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், அவரை மாலிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .