Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” தொடர்பில், கருத்துமோதல்களில் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், “றோ” தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார்.
“இந்தியாவின் “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருப்பார்களாயின், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டுமென, மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
தங்கல்ல, ஹேனகடுவ விஹாரைக்கு, நேற்று (24) வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, மத வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த அரசாங்கத்துக்கு எந்நாளும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் கூறுவது கடினமானது. எனினும், அமைச்சர் மஹிந்த அமரவீர அப்படிச் சொல்வாறாயின், அவ்வாறானவர்களின் பெயர் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
“ஜனாதிபதிக்கு அவ்வாறொன்று இடம்பெறுமாயின் அது, தேசத் துரோகச் செயல். றோவுடன் அவ்வாறான தொடர்பு எதுவும் இருக்குமென, நான் நினைக்கவில்லை. எனினும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அது தொடர்பில் அரசாங்கம், மௌனம் காத்துக்கொண்டிருக்க முடியாது. யுத்த காலத்தின் போது, நாங்கள் அவ்வாறு செய்யவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago