2025 மே 19, திங்கட்கிழமை

லலித், சுசில் உள்ளிட்ட மூவர் சாட்சி

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் PRECIFAC (பி.ஆர்.இ.சி.ஐ.எப்.ஏ.சி)  மூவர் சாட்சியமளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந் மற்றும் சுயாதீன ரூபவாஹினியின் கணக்காளர் ஆகிய மூவருமே சாட்சியமளித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்டிசியில் தேர்தலுக்காக விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்தாமல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமை, விளம்பரப்படுத்த விருந்த எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை, குறிப்பிட்ட அளவுக்கு குறைந்தளவில் பிரசாரப்படுத்தியமையால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கவேண்டிய நிதி  இல்லாமல் செய்யப்பட்டது தொடர்பிலேயே இவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் பிரசன்னமாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X