2025 ஜூன் 12, வியாழக்கிழமை

லிட்ரோ நிறுவனத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

Freelancer   / 2022 மே 21 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளாந்த எரிவாயு விநியோகத்தில் 60 வீதத்தை அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது.

எரிவாயு விநியோகம் தாமதமடைந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக லிட்ரோ நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசி வாயிலாக பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் லிட்ரோ நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் போது விலை அதிகரிக்கப்பட்டாலும், விலை குறைவடையும் போது அதன் பிரதிபலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கோப் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிவாயுவுக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13