2025 ஜூன் 18, புதன்கிழமை

லிந்துலையில் 24 வீடுகள் முற்றாக சேதம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 துவாரக்ஷான்

லிந்துலை, பம்பரகலை நடுகணக்கு தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று நேற்று (10) இரவு 10 மணியளவில் தீ பற்றிக்கொண்டத்தில் அக்குடியிருப்பில் உள்ள 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் ஆவணங்கள், நகைகள் உடுதுணிகள், தளவாடங்கள், பணம் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீவிபத்து ஏற்படும் போது தீயணைக்கும் பிரிவினரோ அல்லது கருவிகளோ உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டோர்  தெரிவிக்கின்றனர்.

இதன்போது, எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை. மின்சார ஒழுக்கு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .