2025 ஜூன் 23, திங்கட்கிழமை

​லொறி ஓட்டோவுடன் மோதுண்டதில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செங்கற்களை ஏற்றிகொண்டு ராவதாவத்த பகுதியிலிருந்து, காலி வீதி ஊடாக கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, ஓட்டோவொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, மொரட்டுவ- ​டிரோன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்துக்கருகில்,  இன்று காலை (24) இடம்பெற்றுள்ளது.

விபத்தில், ஓட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு-மருதானையைச் சேர்ந்த 53 வயதுடைய நப​ரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .