2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 12 பேர் படுகாயம்

Gavitha   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பண்டாரகமையில் இன்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பண்டாரகமைக்கு பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனமொன்று, முச்சக்கரவண்டியொன்றுடனும் வானொன்றுடனும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த அனைவரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X