2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

Freelancer   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X