Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 14 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, அனுராதபுரத்தில் வாடகை அடிப்படையில் வேனைப் பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று 9 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் பாணந்துறையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டியவில் வாடகை அடிப்படையில் 2 கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
5 hours ago