Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான தகவல்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான், வங்கி மற்றும் 80 நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஈ மேலும் சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பிரதம நீதவான், தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, எந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ், விசாரணைகள் இடம்பெறுகின்றன என நீதவான் பிரதி சொலிசிட்டரிடம் வினவியுள்ளார்.
கடமைகளை மீறியதால் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதி சொலிசிட்டர் இதன்போது கூறியுள்ளார்.
நிதி தேவைக்காக, கடமைகள் மீறப்பட்டதாக என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே வங்கிக் கணக்குகளின் அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்த விசாரணைகள் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago