2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

’விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு இடம்பெறவில்லை’

Freelancer   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூரில் த.வெ.க. பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏ.டி.ஜி.பி. டேவிட்​சன் தேவாசீர்​வாதம் தெரிவித்துள்ளார்.

கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது,

வேலு​சாமிபுரத்​தில் நடந்த பரப்​புரை​யின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்​லை. த.வெ.க. தலை​வரின் வாக​னம் கரூர் மாவட்​டம் தளவா​பாளை​யத்​தில் இருந்து திரு​காம்​புலியூர் ரவுண்​டானா வர 2 மணி நேர​மாகியது. சாதா​ரண​மாக 30 நிமிடங்​களில் அந்த இடத்​தைக் கடந்​து​விடலாம். சிறிது நேரம் வாக​னத்​திலிருந்து வெளியே வந்த த.வெ.க தலை​வர், பின்​னர் உள்ளே சென்​று​விட்​டார். இதனால், அங்​கிருந்​தவர்​களுக்கு அவரை பார்க்கும் ஆர்​வம் அதி​கரித்​தது என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X