2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வட்டியால் விலை போன காதல்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காதலனை, கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணொருவர், அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்காக, சுமார் ஏழு பேருடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவமொன்று, காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.  

இந்தப் பெண், தனது வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,  

27 வயதுடைய குறித்த பெண், தனது காதலனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக, வட்டிக்கு பல்வேறு இடங்களில் பணம் வாங்கியுள்ளார். காதலன் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், அந்தக் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பியுமுள்ளார்.  

எனினும், சிறிது காலத்தின் பின்னர், பணம் அனுப்புவதை காதலன் நிறுத்தியதால், கடனைச் செலுத்த முடியாமல், அந்தக் காதலி திண்டாடியுள்ளார்.   

இதனால், தான் பெற்ற கடனுக்கு ஈடாக, இவர் 7 பேருடன் உறவில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தன்னுடைய கடனை அடைப்பதற்காக இவர், ஒருவரிடம் 2,500 ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .