Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், எம்.றொசாந்த், டி.விஜித்தா, சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில், இன்று மாலை 3 மணியளவில், மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தொட்டியடி - விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதுடைய தர்மபாலசிங்கம் தயானந்தன் எனவும், காயமடைந்தவர், 24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் குளிக்கச் சென்றிருந்த போது, மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மின்னல் தாக்கியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கான மற்றுமொரு இளைஞர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வலிகாமத்தின் பல இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.
இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago