2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வத்தளையில் சிக்கிய கேரள கஞ்சா

Freelancer   / 2025 ஜூன் 30 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை - பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 39 கிலோகிராம் கேரள கஞ்சாவை வத்தளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விநியோகத்திற்கு தயார் நிலையில் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததோடு, சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X