2025 ஜூலை 12, சனிக்கிழமை

வதந்தி பரப்பியவருக்கு பிணை

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே, இதற்கான உத்தரவை இன்று (17) பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த அமில துஷ்மந்த என்பவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனவால் இருவர் உயிரிழந்துள்ளதாக போலியான தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டு குறித்த நபர் குற்றமிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .