Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 ஜூன் 17 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவவில் நடந்த கொலை மற்றும் வேன் கொள்ளையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் சம்பவம் ஜூன் 13 ஆம் திகதி வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடந்தது. கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அதிகாரிகள் நேற்று ஜூன் 16 ஆம் திகதி சீதுவையில் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் திருடப்பட்ட வேன் கண்டி பகுதியில் கைவிடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அது மீட்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
26 மற்றும் 29 வயதுடைய சந்தேக நபர்கள் லுனுவில மற்றும் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago