2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூன் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி 54 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விநாயகர்புரம், கிளிநொச்சியைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் இன்னொருவரை ஏற்றிக்கொண்டு கடந்த 21 ஆம் திகதி  சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கார் ஒன்றை  முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுக்கு உள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்  பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை கிளிநொச்சி பொலிஸார் நெறிப்படுத்தினர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .