2024 மே 16, வியாழக்கிழமை

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

J.A. George   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29) வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்துக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் இந்த நிலை அதிகரித்து காணப்படும்.

போதிய அளவு நீர் அருந்துதல், நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை  பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .