2024 மே 17, வெள்ளிக்கிழமை

விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்தது

Editorial   / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி செவ்வாய்க்கிழமை (04) காலை தீடிரென வெடித்ததில் முனையத்தின் கூரை சேதமடைந்துள்ளது.

 சிறிலங்கா விமானப்படையின் தலைமை விமானப்படையைச் சேர்ந்தவரிடம்  இருந்த T-56 ரக துப்பாக்கி தவறுதலாக காலை 10.30 மணியளவில் வெடித்துள்ளது என்றும் இதனால்,  உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

               கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் சிறப்பு விசேட விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.

                கடமையில் இருந்த விமானப்பட வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .