Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 18, சனிக்கிழமை
Mayu / 2024 மே 05 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பகுதியை சேர்ந்த சந்தேக நபரொருவர் இரண்டு வலம்புரி சங்குகளை ரூ.8 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் புத்தளம் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வரகாபொல புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அனுமதிப்பத்திரமின்றி வலம்புரி சங்கு வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது, பல வருடங்களுக்கு முன்னர் அதனை கொழும்பில் தனது பெற்றோர் வாங்கி வீட்டில் வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வலம்புரியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (05) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
18 May 2024