2024 மே 04, சனிக்கிழமை

வலம்புரி தேடி வந்த பொலிஸார் கொள்ளை

Simrith   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் கல்பிட்டி, நுரைச்சோலையில் பொலிஸ் உடையில் மூன்று பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், அதிகாரிகளையும் விழிப்படைய செய்துள்ளது.

பொலிஸ் அறிக்கையின்படி, குறித்த கொள்ளையர்கள் ரூ.8 மில்லியன் பணத்தைம் சுமார் 40 பவுண் நகைகளையும் கொள்ளையடித்துள்ளதாக தெரிய வருகிறது.

பொலிஸ் வேடமிட்ட கொள்ளையர்கள் வலம்புரி என்று அழைக்கப்படும் ஒரு மதிப்புமிக்க சங்கு குறித்த வீட்டில் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அதனைத் தேடும் போலித்தனத்தின் கீழ் தங்கள் வீட்டிற்குள் நுழைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து கொள்ளையர்கள் முதன்மை முகாமையாளரின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, மற்ற குடியிருப்பாளர்ளை மிரட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெளிவரும் நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் பொலிஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .