2025 ஜூன் 18, புதன்கிழமை

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர் விடுவிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

கட்டார் மற்றும்  டுபாயலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பொரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 120 பேர் இன்று (17) விடுவிக்கப்பட்டனர். 

14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், 120 பேர் அவர்களது சொந்த இடங்களான ,திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கேகாலை, கண்டி, பதுளை  போன்ற பகுதிகளுக்கு பஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .