Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும், அதிகரிக்கப்பட்ட வாகனங்களின் விலை குறையாது எனவும், வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வாகன உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை உயரும் என்ற கோட்பாடு தற்போது வாகனங்களையும் பாதித்துள்ளது.
அதே நேரத்தில் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வாகனங்களின் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என சம்பத் தெரிவித்துள்ளார்.
2020 மார்ச் முதல் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது.
எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago