Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 13 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலில் வாக்களிக்க தமது ஊழியர்களுக்கு தொழில்வழங்குநர்கள் விடுமுறை வழங்காவிட்டால், அது நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படக்கூடிய குற்றம் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்களிப்பதற்காக ஊழியரால் விடுமுறை கோரப்படும் பட்சத்தில் வாக்களிக்க அது போதுமானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து விடுமுறை வழங்க தொழில்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வாக்களிப்பதற்காக 4 மணிநேரத்துக்கு குறையாத காலம் சம்பள குறைப்பின்றி வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடுமுறை காலம் மற்றும் ஊழியரின் பெயர் அடங்கிய பட்டியல் சேவை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் குறித்த சலுகையை பெற்றுக்கொள்ள முயன்ற ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் 08ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் உடனடியாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகரிகள், உதவி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
பின்னர் குறித்த முறைப்பாடுகள் மாவட்ட தொழில் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago