2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்களிப்பு நிலையத்துக்கருகில் குழப்பம் விளைவித்தவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மினுவாங்கொட- போரகொடவத்த பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் குழப்பம் விளைவித்த நபர் ஒருவ​ர், மினுவாங்கொட பொலிஸாரால் இன்று (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் வாக்களிப்பதற்காக வருகைத் தந்த மக்களிடம் குறித்த நபர் குழப்பம் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக் காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், பொரகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரை மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மினுவாங்கொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .