2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வான் திருட்டு சம்பவம்; இருவர் கைது

Editorial   / 2019 மே 05 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வான் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 3ஆம் திகதியன்று தெஹிவளை பிரதேசத்தில் வைத்து வான் ஒன்றை திருடியமை தொடர்பில் தெஹிவளை ​பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர்களை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .