2025 ஜூன் 28, சனிக்கிழமை

வான் விபத்து ; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெளுவ, லேலவத்த பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணஞ்செய்த ஏழு பேர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (08) காலை, குறித்த பகுதியில் ​தோட்ட வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் போதே, வான் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானின் டயரொன்று வெடித்தமையின் காரணத்தால், குறித்த வான் குடைசாய்ந்துள்ளது. இதில் காயமடைந்த 7 பேரும் உடனடியாக நெளுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .