2025 ஜூன் 28, சனிக்கிழமை

வி​சேட ​போக்குவரத்துச் சேவையின் காலம் நீடிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டுக்காக ​சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக, விசேட போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீ​டிப்பதற்கு, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை புதுவருட விசேட பயணிகள் சேவையை இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை ரயில்வே திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன முன்னெடுத்திருந்த நிலையி​லேயே குறித்த விசேட போக்குவரத்து சேவைகள் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி கொழும்பின் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் கரணமாக மீண்டும் கொழும்புக்குத் திரும்ப முடியாத பயணிகளுக்காக குறித்த விசேட பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .