2025 ஜூன் 18, புதன்கிழமை

விபத்தில் இரு பெண்கள் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையிலிருந்து யட்டியன  நோக்கி பயணித்த வான் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து, அபரெக்க பகுதியில், ​இன்று காலை 6 மணிக்கு சம்பவித்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களே இவ்வாறு மோதியுள்ளதுடன், இதன்போது ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இரண்டு வாகனங்களிலும் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாக தியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  வான், தனியார் பஸ்ஸின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள்  இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 35, 43 வயதுடையவர்களாவர்.

இவர்களில் ஒருவருக்கு 4 பிள்ளைகளும் இன்னொருவருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனரெனவும், இவர்கள், பெலியத்த, புஹுல்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .