Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறையிலிருந்து யட்டியன நோக்கி பயணித்த வான் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து, அபரெக்க பகுதியில், இன்று காலை 6 மணிக்கு சம்பவித்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களே இவ்வாறு மோதியுள்ளதுடன், இதன்போது ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இரண்டு வாகனங்களிலும் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாக தியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வான், தனியார் பஸ்ஸின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 35, 43 வயதுடையவர்களாவர்.
இவர்களில் ஒருவருக்கு 4 பிள்ளைகளும் இன்னொருவருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனரெனவும், இவர்கள், பெலியத்த, புஹுல்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
50 minute ago