2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஊழியர்கள் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 06 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் 38ஆம் கட்டைக்கு அருகில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் இருந்து நொச்சியாகம பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த இரு ஊழியர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு ஊழியர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவ்விருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .