2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் கர்ப்பிணி உட்பட 8 பேர் காயம்

Editorial   / 2019 மே 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா – எல, தெற்கு நிவந்தம, வெவேல்காரய பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு எட்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண வைபவமொன்றில் பங்குபற்றுவதற்காகச் சென்றுக்கொண்டிருக்கையிலேயே விபத்து நேர்ந்தாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வான் வேகக்கட்டுபாட்டை இழந்து, தொலைத்தொடர்பு தூண் ஒன்றில் மோதி ​விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காய​மடைந்தவர்களில், கர்ப்பிணியொருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்தப் பொலிஸார், அவர் சிசேரியன் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .