2024 மே 18, சனிக்கிழமை

விமான நிலையத்தில் நகைக் கடைக்கு அனுமதி

Simrith   / 2024 மே 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் நகைக் கடை நடாத்துவதற்கான ஒப்பந்தகாரர்களை அழைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய வர்த்தக வாய்ப்பாக தங்க வணிகம் ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு, இது தொடர்பான முன்மொழிவுகள் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை (தனியார்)) நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வசதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இல்லை எனவே புறப்படும்/போக்குவரத்து பகுதியில் தங்கக் கடையை அமைக்க AASL  திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், சர்வதேச போட்டி கொள்வனவு முறையைப் பின்பற்றி இதற்கான பொருத்தமான செயற்பாட்டாளரைத் தெரிவு செய்வதற்கு, ஒப்பந்தம் கோருவதற்கு, சர்வதேச போட்டிக் கொள்வனவு முறையைப் பின்பற்றி ஒப்பந்தகாரர்களை அழைப்பதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .