2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘விலை சூத்திரம் இனிமேல் இல்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது தவறாகும். ரணிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பை பொலிஸாரே பொறுப்பேற்க​ வேண்டும் என்றார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், எரிபொருள் தொடர்பிலான விலை சூத்திரம், இனிமேல் அமுல்படுத்தப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

54 எம்.பிக்களைக் கொண்டிருந்த எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்​தோம். எனினும், நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருந்தது. அது, எமது அரசாங்கத்திலும் தொடரும் என்றார்.

ரணிலின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது தவறாகும். அவர், இந்நாட்டின் பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் நான்கு தடவைகள் பதவி வகித்திருக்கின்றார் என்பதால், அவரது பாதுகாப்பை பொலிஸாரே பொறுப்பேற்கவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .