2025 ஜூன் 25, புதன்கிழமை

வில்பத்து தொடர்பான மனு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 மே 28 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய வனத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் நீதி மய்யத்தால் 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மேன்முறையீட்டு நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு ​செய்யப்பட்டதுடன்,  அது தொடர்பான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை ஜூலை மாதம் 31ஆம் திகதி மீண்டும் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகளான ஜனக் டீ சில்வா, நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .