2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விளையாட்டுத் துப்பாக்கியில் சுட்டவர் காயத்துடன் சிக்கினார்

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நிறுவனமொன்றில் கொள்ளையடிப்பதற்காக மறைந்திருந்த ஒருவர், தான் வைத்திருந்த பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட விளையாட்டுத் துப்பாக்கியில், பொலிஸாரை நோக்கி குறிவைத்துக்கொண்டிருந்த போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று, ஹொரணையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர், ஹொரனை அரசாங்க வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிசிக்சைப்பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது, ஹொரணை நகரிலுள்ள நிதி நிறுவனமொன்றில், கொள்ளையடிப்பதற்கு ஒருவர் நேற்று (16) அதிகாலை 3 மணியளவில் நுழைந்துள்ளார்.

எனினும், அந்த ​நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஒலி சமிக்ஞை இடைவிடாது ஒலிந்துள்ளது.

இதனை அவதானித்த பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்து, அந்த நிதி நிறுவனத்துக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நபரை கைதுசெய்துவதற்கு முயன்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரொருவர் அந்த நிதிநிறுவனத்தின் முதலாவது மாடியில் நின்றிருந்ததை கண்ட பொலிஸார், அவரை கைதுசெய்தவதற்கு முன்றுள்ளனர்.

அப்போது, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அந்த நபர், பொலிஸாரை நோக்கி சுடுவதற்காக, குறிபார்த்துள்ளார். விரைந்து செயற்பட்ட பொலிஸார், அந்த நபரின், வலது கால்பாதத்தில் சுட்டுள்ளனர்.

கையிலிருந்த துப்பாக்கியை வீசிவிட்டு, அந்த நபர் துடித்துள்ளார். அதனையடுத்து அவரை பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதன்பின்னர், கொள்ளையரால் வீசப்பட்ட துப்பாக்கியை எடுத்து சோதனைக்கு உட்படுத்திய போதே, அந்த துப்பாக்கி, ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட விளையாட்டு துப்பாகியென கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்றுவரும் நபர், மிமின பொக்குனுவிட்டவை வசிப்பிடமாகக் கொண்ட ஜனித் புஷ்பகுராம எனத் தெரிவித் பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .