2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி அறிக்கை

Freelancer   / 2023 நவம்பர் 03 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவும், தேர்வு குழுவும் ஏற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோல்விக்கான பொறுப்பை, வீரர்களை விடவும், அதிகாரிகளே ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு மற்றும் தேர்வு குழுவிற்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது  பதவிகளிலிருந்து அவர்களே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும்  விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .