2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘வீசா இல்லாத ஆசிரியர் கைது’

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீசா இல்லாமல் இலங்கைக்கு வருகைதந்த எகிப்து நாட்டுப் பிரஜையொருவர் மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (24) காலை குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் நான்கு வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எனினும் அவரிடமிருந்து கடவுச்சீட்டு, வீசா ஆகிய ஆவணங்களேதும் இல்லையெனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நபர், குறித்த பகுதியில் அமைந்துள்ள அராபி பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருவதாகப் பொலிஸாரிடம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .