2025 ஜூலை 19, சனிக்கிழமை

’வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது’

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் தவறியுள்ளது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லை என்றால், தற்போதைய நிலையை விட நாடு மேலும் சீர்குலைந்துவிடும் என்றும்  அவர் கூறினார்.

இதற்கான தலைமைத்துவத்தைப் பயன்படுத்தாது, இது தொடர்பில் எதையும் முன்னெடுக்காமல், ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சர்களோ, ரூபாயின் விலை அதிகரிக்கும் எனக் கூறுவார்களாயின், நிச்சயமாக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துகொண்டே செல்லும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, நாளுக்கு நாள் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதால், நாட்டின் கடன் சுமை, நாளொன்றுக்கு 34 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என்று,  கடன் அதிகரிக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X