Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 04 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் ரயில் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில், நேற்று (3) மாலை கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்கள் நேற்று (3) இரவு பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
சாந்திபுரம் ரயில் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் குறித்த இரு பொதிகளையும் சோதனையிட்டனர்.
இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, குறித்த வெடிபொருள்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
26 Jun 2025