2025 ஜூன் 28, சனிக்கிழமை

’வேறுபாடுகளை புறந்தள்ளவும்’

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேறுபாடுகளைப் புறந்தள்ளி, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரச் சவால்களை வெற்றிக்கொள்வதற்காகச் செயல்படவேண்டுமென்று, இலங்கை, மாலைத்தீவுக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி எலேயினா டெப்லிடிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமீபத்தில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்தியில், இலங்கையில் ஜக்கியத்தை நிலைநிறுத்துவது முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தப் பயங்கரவாதத் தாக்குதல், சில நபர்களின் செயல்பாடுகளேயாகும் என்றும் இது மொத்தச் சமூகத்தின் நடவடிக்கை அல்ல என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

அனைத்து மதத்துக்கும் உட்பட்ட இலங்கையர்கள், இந்த் தாக்குதலை கண்டிப்பதாகும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த பதில் ஜக்கியமாவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, பெடரல் விசாரணை அலுவலகத்தினதும் அமெரிக்க விஷேட குழுவினதும் ஒத்துழைப்பும் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சவாலுக்கு மத்தியில், முன்னரிலும் பார்க்க வலுவாகவும் ஜக்கியத்துடன் செயற்படுவதற்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அர்பணிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .