2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

வேலு குமாரை தாக்க முயற்சி: புசல்லாவையில் அமைதியின்மை

Freelancer   / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. 

அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார்.

அந்நிகழ்வின் பின் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலு குமார் எம்.பியை இ.தொ.க வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்தது.  

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான இ.தொ.க வின் இரட்டை முகத்தை தொடர்ச்சியாக வேலு குமார் எம்.பி. விமர்சித்து வந்தார். 

உண்மையை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமலே இவ்வாறான அநாகரீக செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கடும் எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவித்தனர். 

வேலு குமார் எம்.பியை தாக்க முயற்சித்த செல்லமுத்துவின் அடியாட்கள் மக்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கி சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .