2025 ஜூன் 25, புதன்கிழமை

‘வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைபாடு கிடைக்கவில்லை’

Editorial   / 2019 மே 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர், ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக நேற்று (27) வரை எவ்வித முறைபாடுகளும் இலங்கை வைத்திய சபைக்கு கிடைக்கவில்லையென, அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாய்மாருக்கு  வைத்தியரால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்தடைத் தொடர்பில் , இலங்கை வைத்திய சபைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முறைபாட்டாளர்கள் தமது விடயங்களை உறுதிப்படுத்தும்  தகவல்கள் அடங்கிய முறைபாடுகளை முன்வைத்தால், அதனை உடனடியாக விசாரித்து, முறைபாட்டாளரிடமும் குற்றஞ்சாட்டப்பட்டவரிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .