2025 ஜூன் 16, திங்கட்கிழமை

வௌிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு பிரஜைகள் நால்வர் கல்கிசையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜைகள் மூவரும் உகண்டா நாட்டு பெண்ணொருவருமே 
இணையத்தளத்தினூடாக மோசடி செய்த குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடமிருந்து வங்கி கடனட்டைகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X