Editorial / 2021 ஜூலை 04 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவு விடுதிகள் மற்றும் ஸ்பாக்கள், ஆகியவற்றை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல்களிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. நாளை (05) முதல் இவையிரண்டு இயங்கும்.
இந்நிலையில், ஹோட்டல் மற்றும் ஓய்வு விடுதிகளும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், விடுதிகள், பார்கள் மற்றும் இரவு விடுதிகள் தங்களுடைய செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 நபர்களின் பங்குப்பற்றலுடன் பதிவுத் திருமணத்தை முன்னெடுக்கலாம். அத்துடன், சகல மத வழிபாட்டிடங்களும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன.
இந்த திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும 19ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும்.
14 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago